Monday, 9 November 2015

இன்று
*********
"ஜனசக்தி" நாளிதழ் பிறந்த நாள் நவம்பர் 7(1937)
********************************************************************

பகுத்தறிவு,அறிவியல்,பொதுவுடைமைத் தத்துவங்களை பொதுமக்களிடையே -குறிப்பாக உழைக்கும மக்களிடையே பரப்புவதற்காகவும் அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறப் பாடுபடுவதற்காகவும் தொடங்கப்பட்டது ஜனசக்தி.

இதன் முதல்ஆசிரியர் பகுத்தறிவுப் பொதுவுடைமைப் பேராசான் தோழர் ப.ஜீவானந்தனார்.

1942ல்தான் இது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஏடாக மாற்றப்பட்டது.

20-11-1937ல் ஜனசக்தி நாளேட்டில்தான் பாவேந்தரின் புகழ்பெற்ற புரட்சிப்பாடல்களில் ஒன்றான இந்தப்பாடல் வெளியாயிற்று:

புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்

பொதுவுடைமைக் கொள்கை திசைஎட்டும் சேர்ப்போம்
  புனிதமேடதை எங்கள் உயிரெனக் காப்போம்.

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதெனும்ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனியெனும் மனிதரைச் சிரிப்போம்

இயல்பொருள் பயன்தர  மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாமெனில் அனைவரும் புசிப்போம்

பாவேந்தர் பாரதிதாசன்(ஜனசக்தி/20-11-1937)

*********************************************************************

No comments:

Post a Comment